அவள் யாரோ................!
அன்று உன்னை காதலிக்கும் போது
காதலுக்குப் பயப்பிட்டேன்
இன்று யாரையும் காதலிக்க
பயப்பிடுகிறேன்
உன்னை மாதிரியே
இருந்துவிடுவாளோ
என்று......
******************
![](http://3.bp.blogspot.com/_ZiFcdazuwFs/THuEeOkFnDI/AAAAAAAAAEA/HGa_JauY2qw/s320/p.jpg)
நீ எது வாங்கிக் கொடுத்தாலும்
எதையாவது செய்துவிடுவேன்
பதிலுக்கு
"கடன் உறவை பிரிக்கும்"
என்பதால்
இன்று பிரிவை தந்திருக்கிறாய்
பதிலுக்கு என்ன செய்வேன்...?
*********************
![](http://3.bp.blogspot.com/_Re9W4M2Q5WU/TVBAKB_OVAI/AAAAAAAAAEA/u8m1b6X8PTc/s1600/creative_wallpaper_tears_from_my_eyes_019022_.jpg)
தொலைந்த நாய்குட்டியைத்
தேடி விளம்பரப்படுத்தும்
மனசுள்ள உனக்கு
உன்னால் தொலைந்து போன
என்னை தேடிப்பார்க்கும்
கண்கள்கூடவா இல்லை.....
**********************
![](http://static.desktopnexus.com/thumbnails/39933-bigthumbnail.jpg)
தினமும் நாட்காட்டிகளை
நானும் கிழிக்கிறேன்
உன்னால் வீணாய் போய்க்கொண்டிருக்கும்
நாட்களை பார்க்கப் பிடிக்காமல்.....
**********************
![](http://4.bp.blogspot.com/_ZiFcdazuwFs/TH0WNZhjPVI/AAAAAAAAAFE/9MTJEL47e5Y/s320/i.jpg)
நீ பிரிந்த பின்னும்
உன்னை காதலிக்காமல்
இருந்ததில்லை நான்
கவிதைகள் வேண்டுமே
என் தனிமைக்கு.......
****************************************
****************************
***********************
**************
****
**
*
-யாழ்_அகத்தியன்
|