அன்னையர் தின கவிதை........!
உன்னைப் போல்
சமைக்க தெரியாது
என் மனைவிக்கு
ஆனாலும்
அவள் கைவிரலில்
உன் கைவாசம்
நீ பிடித்து தந்தவள்
அல்லவா........
******************
![](http://1.bp.blogspot.com/-0O0QHV9JqU4/TcY-wRgPF3I/AAAAAAAAAOA/OoJdY3vQlTk/s1600/usha%2B1.JPG)
என்னை பாதுகாப்பாகத்தான்
வைத்திருக்கிறாள் என் மனைவி
ஆனாலும்
பயமாக இருக்கிறது உன்
கருவறையில் இல்லை நான்.....
****************
![Paristamil](http://www.paristamil.com/tamilnews/image.php/thumb_811.jpg?width=310&height=233&image=http://www.paristamil.com/tamilnews/images/thumb_811.jpg)
உன் மடியில் தூங்கும்
தூரத்தில் நானில்லை
என்பதால்த்தான்
என் மடியில் தூங்கிக்
கொண்டிருக்கிறது
எல்லா துக்கங்களும்....
***********************************************
****************************
*****************
************
*****
***
*
-யாழ்_அகத்தியன்
|