என் கண்ணீரில் நீ......!
எத்தனை முறை வேண்டுமானாலும்
குழந்தையாகலாம் உன் மடி
கிடைக்கும் என்றால்...............
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/redemption_by_.jpg)
சொர்கத்தில் இருக்கும் என்
காதலைத்தான் உனக்கு கவிதையாய்
தருகிறேன் அதை நீ தெரிந்தோ
தெரியாமலோ கிழித்தெறிந்து
சாகடித்துவிடுகிறாய்...........
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/besog.jpg)
நான் ஆனந்தக் கண்ணீரை
கவிதையாக்கினாலும் எப்படியோ
வந்து அழுதுவிட்டு போய்விடுகிறாய்
என் வாசகர்களை அழவைக்க.......
************
![](http://lh3.ggpht.com/_QvRRob_x8Hw/Sf5JWC6YexI/AAAAAAAAAnc/4PKbbzwH4pY/s400/girl_walking_in_the_hazy_light.jpg)
என்னை விட்டு போனாலும்
நீ அழுது கொண்டே போனதில்தான்
உணர்தேன் எனக்காகத்தான்
பிரிந்திருப்பாய் என்பதை.........
************
![](http://1.bp.blogspot.com/_H-o5BB_4Yps/TOKYkXmLDBI/AAAAAAAAAQc/eBHSSIHvRZA/s1600/Yaadumaagi-post.JPG)
நீ பிரிந்தும் சேவை செய்கிறாய்
என் கவிதைகளால் பல
காதலர்களை சேர்த்து
வைக்கிறாயே..........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|