![](http://4.bp.blogspot.com/_h8RNLTBC7o8/THOp6yWnMvI/AAAAAAAAAAM/1Msc3fsq3ng/s1600/2c0e37fe40245a775f81b7d.gif)
எறும்பு ஊர கல்லும்
தேயுமா என்பது தெரியாது
உன் மனக்கல் மீது
யார் ஊர்ந்தாலும்
அவர்கள்தான் தேய்வார்கள்
என்பது மட்டும்
தெரியும்.....
************
![](http://wallpapersall.com/wp-content/uploads/2010/09/prachi-desai-indian-sari.jpg)
என் கவிதைகளின்
எழுத்துப் பிழைகளை
நீ சரி செய்வதைவிட
மிக அழகு உன்
உடையை நீ சரி
செய்வது.....
************
![](http://icdn1.indiaglitz.com/tamil/previews/jillunu230606_1.jpg)
நீ
ஆசைபட்ட பொருட்கள்
எல்லாவற்றையும் வாங்கி
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
பத்திரப் படுத்தியதற்காகவாவது
என் மேல் உனக்கு
ஆசை வந்துவிடும் என்ற
நம்பிக்கையில்.....
**************
![](http://3.bp.blogspot.com/_Mv31gkCcf_s/TQJ5-8t0KKI/AAAAAAAAANY/jkPxalV_lb0/s1600/mother+and+child1.jpg)
குழந்தையை தூக்கி கொஞ்சுகிறாய்
குழந்தையோ உன்னைக் கொஞ்சுகிறது
குழந்தை நீ தூக்கியதற்காய்.....
************
![](http://1.bp.blogspot.com/_4ge6JY0ZTyg/S2b9SZ7X2oI/AAAAAAAAASE/-GuabdtVbtg/s320/tulsi+pooja.jpg)
பூ
செடியை
சுற்றுமா என்ன..?
நீ
துளசிச் செடியை
சுற்றும்போது
என்னை நானே
கிள்ளிப்
பார்க்கிறேன்....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|