* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  உன் நினைவே மாயம்…!
 



உன் நினைவே மாயம்…!
 





உன் மீது  நான் கொண்ட
காதலை இறைவனிடம் 
கொண்டிருந்தால் 
எப்போதோ எனக்கு 
மோச்சம்  கிடைத்திருக்கும்.....






************





 

உனக்காய்  எழுதிய கவிதைகளை
அச்சடித்திருந்தால்  புதிய காவியம்
ஒன்று கிடைத்திருக்கும்.....






*************




 

நீயோ....
காதலால் எனக்கு அழகானாய்
கவிதையால் எனக்கு
நிலவானாய்...



ஆனாலும்..
நீ  நினைத்த மாதிரியே 
என் இதயத்தை 
ஒத்திகை  மேடையாக்கி
உன் காதல்  அபி நயங்களை 
அழகாய் பழகிச்  சென்று
விட்டாய்......




இதில் என்ன  ஆச்சரியம் என்றால்
கொஞ்ச காலமெடுத்தாலும் 
ஆசிரியர் இல்லமாலே 
நீ நீயாவே நடன
ஆசிரியையானதுதான்......






************





[Adhey-Neram-Adhey-Idam23.jpg]

திருவிழா நெரிசல்களில் 
தொலைத்துவிட்டாலும்
தேரில் பவனி வந்து 
எனக்குத் தரிசனம் தருவது
உன்  நினைவு
மட்டும்தான்....




மறப்பதா..?
உன்னையா...?
நானா..?




பேசாமல் என்னை நீ
செத்துப்போக சொல்லி
இருக்கலாம்
நீர் இன்றி வாழலாம்
உன் நினைவின்றி
வாழமுடியுமா..?






**********







உன் மொழி எனக்குள்
மெளனமானாலும்
நீ பிரியாமாய் பேசியதையும்
நீ பிரியமின்றி பிரிந்ததையும்
கவிதையாய் கிறுக்கவைத்தே
என்னைக் கவிஞனாக்கிறது.....






**********






உன் நினைவுகளில்
நீந்துவதற்கும் மூழ்குவதற்கும்
என் கண்ணீர்தான் கற்றுத்தந்தது.
ம்ம்ம்....




எனக்கான உலகமாய் 
நீயிருந்தாய்
உன்னை சுற்றியே 
என் நினைப்பிருந்தது 
உண்மைதான்...




அதுசரி...
உண்மையான காதலால் 
மட்டும்தானே நினைப்புகளையும் 
நினைக்க வைக்கமுடியம்.....







**********************************
************************
***************
*****
**
*





-யாழ்_அகத்தியன்



 
  Today, there have been 157 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free