ஈரமில்லா ரோஜா.....!
நீ வீசும் காற்றுக்காய்
காதலால் துளைக்கப்பட்ட
குழலே என் இதயம்..........
************
![](http://www.bratzlovemeter.co.uk/blog/wp-content/uploads/2010/12/sad-love.jpg)
நீ எனக்குக் கொடுத்த
தண்டனை எது தெரியுமா..?
கடலில் வாழ்ந்த என்னைக்
காப்பாற்றுகிறேன் என
தொட்டிக்குள் கொண்டு
வந்ததுதான்.....
************
![](http://2.bp.blogspot.com/_zVBCDZG6zWU/S73I-cP5y5I/AAAAAAAABDI/OPVh2L_K6gw/s1600/25349_1345658394229_1014337424_997883_623000_n.jpg)
நீ என்னில் முளைத்ததும்
நான் உன்னில் முளைக்காமல்
போனதிலும் தெரிந்து கொண்டது
ஒரே விதையென்றாலும் வேர்விட
எல்லா மண்ணும் சம்மதிப்பதில்லை
என்பதுதான்............
************
![](http://lh5.ggpht.com/__KO8CeenItc/S803_wBs0eI/AAAAAAAAD-U/ih1b-hWJbm0/all_the_simple_things_by_akreon_thumb%5B3%5D.jpg) ![](http://www.glitter-graphics.com/images/empty.gif)
உன்னால் புகைக்கப்பட்ட
சிகரட் நான் என்றாலும்
உனக்கு முன்னே இறந்துபோன
பாக்கியசாலி நான்...........
************
என் வாழ்க்கை எனும்
பேருந்தில் இறங்கிப் போன
மறக்க முடியாத
சாரதி நீ......
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|