* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன்
   
  பகல் “நிலா”
  நிலையானவளே..!
 

என் சோம்பேறி மனசு
செய்த வீரமான செயல்


உன்னைக் கண்டதும்
ஓடிப்போய்
உன்னைத் தொட்டுவிட்டு
திரும்பி வராததுதான்....



 

************





Smiling Beauty Genelia DSouza

கையசைத்துவிட்டு
கல்லூரிக்குள்
நுழைந்து விடுகிறாய்
நீ



விடை பெற்றுப் போகும்
கடைசி நாள் மாணவன் போல்
வீடு செல்ல மனமில்லாமல்
நான்.....






************





 
நம் காதலுக்கு
முதல் எதிரி
நேரம்தான்



பார்     நாம்
சேர்ந்திருக்கும்  போது
மட்டும்தான்
போட்டி  போட்டு
ஓடுகிறது.....






************






உன்னைக் காதலிக்க
வேண்டாம் என்பவர்களை
கூட்டி வா



ஒரு நிமிடம் 
நீ இல்லாத என்னை
கொடுத்துப் பார்ப்போம்



சமாளிக்க முடிந்தால்
சமாதானம் பேசுவோம்....





************







என் கைகளுக்கு
இதுவும் தேவை
இன்னும் தேவை


என்னை எதுவும்
கேக்காமலே உன்னை
அணைத்து பழகிவிட்டு



 நீ தூரம்
இருக்கிறாய் என்று
தெரியாமல்
தேடிக் களைக்கிறது....






**********************************
************************
***************
*****
**
*





-யாழ்_அகத்தியன்


 
 
  Today, there have been 3 visitorson this page! பகல் "நிலா"  
 
* என் காதல் மனைவி நிலாவின் கண்களுக்கான என் கவிதைகள் இவை* -யாழ்_அகத்தியன் This website was created for free with Own-Free-Website.com. Would you also like to have your own website?
Sign up for free