நீ என் இதயத்தில்
இருப்பவள் அல்ல
என் இதயமாயிருப்பவள்
என்பதால்தான்
உன்னை காதலிக்கிறேன...
************
என் கவிதைகளில்
எழுத்துப் பிழைகள்
அதிகம்தான்...
என்னுடைய பிழைகள் எல்லாமே
நீ கவிதையாக இருந்தும்
எழுதியதே......
***********
நான் உன் கவிதைகளுக்கு
வாசகன் மட்டுமல்ல
உன் கவிதைகளை படிக்கும்
யாரக இருந்தாலும்
அவர்களின் கண்ணாடியின்
தூசு துடைக்கும்
வேலைக்காரனும் கூட...
************
அன்பே உனக்காக
என் கவிதைகளை
தூதனுப்புகிறேன்
காரணம்...
உன் இதயத்தில் ஓர்
இடம் வேண்டும்
எனக்கு..
ஏனென்றால்
எனக்கான உலகம்
அங்குதான்
இருக்கிறது...
************
நிலா........
நீ வேண்டும்
என்கிறது
என் இரவுகள்..
நிலா....
நீ வேண்டும்
என்கிறது என்
நட்சத்திரங்கள்....
ஏன் தெரியுமா...?
எனக்கான துணை
நீ என்பதால்....
************
நீ நீலாதான்
அதற்கான சாட்சியங்கள்
என்னிடம் நிறையவே உண்டு
நீ நிலாதான்
அதனால்தான் நட்சத்திரங்கள்
எனும் கூட்டத்தோடு
எப்போதும் வருகிறாய்.....
************
உன் துணையாகும்
வயதுதான் எனக்கு
இருந்தும்
திருவிழாக் கூட்டத்தில்
உன்னைக் கண்டால்
காணாமல் போகும்
குழைந்தையாகிறேன்....
************
இன்னும் எனக்கு
ஞாபகம் இருக்கிறது
உன் பொம்மைக் குழைந்தைக்கு
நான் தான் அப்பா என்று
அறிமுகப்படுத்திய
உன் குழைதைத்தனம்....
************
உன் அடக்கத்துக்கு
ஆபரணமாகிறது
உன் புன்னகை.........
உன் நாணத்துக்கு
அலங்காரமாகிறது
உன் கண்கள்.....
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|