| 
உன் இருகையில் மட்டும்தான்தூங்கி இருக்கிறேன்.....
 
 
 
 
 
 
 ****************
 
 
 
 
 
 
  
 அம்மா உனக்கு அவ்வளவு
 பாரமாய் இருந்தேன் என்றா
 பால் கொடுத்து என்னை
 வளர்த்தாய்  நீ தூக்கவே
 முடியாதளவுக்கு.........
 
 
 
 
 
 
 ****************
 
 
 
 
 
 
  
 வெற்றி பெற்றால்
 தேடி வந்து வாழ்த்த
 ஆயிரம் உறவுகள்
 
 தோற்றுப்போனால்தேடி வந்து அணைக்க
 உன்னைத் தவிர யார்
 எனக்கு.......
 
 
 
 
 
 
 *****************
 
 
 
 
 
 
 
  ஆயிரம் முறை
 தலை சீவிய
 சந்தோசம்
  நீ
 ஒரே ஒரு தடவை
 தலை கோதிவிடும்
 போது......
 
 
 
 
 
 *****************
 
 
 
 
 
 
  
 எல்லாம் சேலைதான்
 எனினும்
  நீ
 கட்டிய சேலையில்தான்
 என் நிம்மதியான தூக்கம்
 அவிழ்ந்து கிடக்கிறது......
 
 
 
 
 
 
 *****************
 
 
 
 
 
 
  
 என்னை நடக்க வைத்துப்
 பார்க்க வேண்டும்
 என்ற ஆசையை விட
 
 
 
  நான் விழுந்துவிடக்கூடாதுஎன்ற கவனத்தில்தான் இருந்தது
 உன் தாய்ப்பாசம்........
 
 
 
 
 
 
 ********************************************
 ****************************
 *****************
 ********
 ****
 **
 *
 
 
 
 
                                                              யாழ்_அகத்தியன்
 
   |