காதல்..................!
![](http://3.bp.blogspot.com/_IPWLUuWEGkI/SNmPZKUfYPI/AAAAAAAADa0/futA9_1JQYg/s320/788614on1w9oew58wo5.jpg)
என் நலன்களை
நீ விசாரித்த பொழுதுகளிலேதான்
நலமாக்க மருந்தானது காதல்....
……………………………………..
![](http://www.dreamstime.com/young-love-couple-holding-hands-thumb13738287.jpg)
நீ என் கூட
கோபம் போடும்
நேரங்களில்தான்
காதல் என் கூட
நேசம் போடுகிறது....
……………………………………..
![](http://3.bp.blogspot.com/_P0nqbjLNoA0/SGnnz4l47xI/AAAAAAAAAQI/-qNS0Mg7oMU/s320/sb10061837c-002.jpg)
நீயும் நானும் மெளனம்
காக்கும் நேரங்களில்தான்
காதல் நம்மை வைத்து
கவிதை எழுதுகிறது....
……………………………………..
![](http://www.abhs.com/sad_girl_small.jpg)
நீ பிரிந்த பிறகுதான்
என் காதலை அளக்க
அளவுகோல்
இல்லையென்றது காதல்....
……………………………………..
எழுத்துப் பிழை விட்டாலும்
பரவாயில்லை கவிதை எழுத
சொல்லும் காதல்.....
……………………………………..
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/hgt.jpg)
கற்றுக்கொடுக்கும்
விட்டு கொடுப்பது எப்படி
விட்டுக்கொடுப்பதுதான்
காதல் என்று.....
……………………………………..
![](http://1.bp.blogspot.com/_7RMr2wJXIM0/ScIdw7qBI_I/AAAAAAAAEtg/S73TpHl3eEI/s320/waitingforlove28x17.jpg)
மீசை வளர்ந்த பிறகுதான்
நான் வயசுக்கு வந்தேனாம்
பொய் சொல்கிறார்கள்…
காதல் வந்த பிறகுதான்
நான் வயசுக்கே வந்தேன்......
……………………………………..
![](http://1.bp.blogspot.com/_aTTsIz1DEuE/SRgBfmPIlwI/AAAAAAAAAE4/N-2XFl2XvG8/s400/john-waterhouse-boreas.jpg)
நீ
என்னங்க.. என்று
என்னை அழைக்கும்
போதுதான் காதல்
என்னை தட்டி எழுப்புகிறது......
……………………………………..
![](http://xavi.files.wordpress.com/2008/02/love11.jpg)
நீ பிரிந்து தூர மறையும்
போதுதான் காதல் எனக்குள்
உதிக்க ஆரம்பிக்கிறது.....
……………………………………..
![](http://1.bp.blogspot.com/_lf570w0SjLQ/Sr4vaF0Er6I/AAAAAAAAFKg/MTKv1ET0lrQ/s400/black+rose.jpg)
உன் பிரிவிலாவது
பொய் சொல்ல
வைத்திருக்கும்
காதல்………..
*******************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|