என் உயிரானவளே......!
என்னைப் பிரிந்து நீ
எங்கோ வாழ்கிறாய் இருந்தும்
நீ பிரிந்ததை ஞாபகப்படுத்த மறுக்கிறது
என் காதலின் நினைவு.....
*****
உன்னோடு வாழ்ந்த காலத்தைவிட
உன் நினைவுகளோடு வாழும்
காலம்தான் அதிகம் என்றபோதும்
என்னைக் கவலைப்பட விட்டதில்லை
உன் ஞாபகங்கள்.....
*****
எரிக்க மனமின்றித்தான் எரித்தேன்
உன் கடிதங்களை அதன் எழுத்துக்களாவது
என்னோடு எரிந்துவிட
வேண்டும் என்பதற்க்காக.....
*****
என் கவிதைகள் எல்லாமே
சோகத்தோடு பிறப்பதால்த்தான்
உன் கண்ணில் படமாலிருக்க
என் கையாலே கொள்ளிவைத்து
விடுகிறேன்...
*****
உன்னைச் சந்திக்கும் வரை
உன் முகத்தை யார் யாரோ முகத்தில்
தேடிப்பார்த்தேன் உன்னைப் பிரிந்த பின்
என் முகத்தை யார் யாரிலோ
தேடிப் பார்க்கிறேன்.....
******
தயவு செய்து என் பெயரை
உன் பிள்ளைக்கு வைத்து விடாதே
நீ உயிரோடு இருக்கும் போதே
அனாதையாகிவிடும்....
******
என் ஆயுளின் அந்தியிலாவது
உன்னைச் சந்திக்க நேர்ந்தால்
உன்னிடம் சொல்லச் சுமந்த
வார்த்தை இதுதான் _உன்னை
நான் மறந்து விட்டதாகவே
நீ நினைத்து விடு என்பதே...
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|