இப்படிக்கு நான்.......!
என் கண்கள் காட்டிக் கொடுத்த
உண்மைகளை விட என் காதுகள்
கேட்ட பொய்களே அதிகம்....
*******************
எனது கல்லை எப்போதும்
இரண்டு விடயங்களை
நோக்கியே வீசுகிறேன்
தவறினால்
ஒன்றாவது விழும்
என்பதால்.........
******************
இந்த உலகத்துக்கு நான்
ஒரு புத்தகமாகவாவது
இல்லாமல் இறந்தாலும்
ஒரு தத்துவத்தையாவது
விட்டுத்தான் இறப்பேன்......
******************
நான் எதையும்
சம்பாதிக்கவில்லை
என்னைத் தவிர எனக்கு.....
******************
நான் எதையும் இழக்கத் தயார்
இழப்பதைவிட பெறுவது
பெறுமதி வாய்ந்ததாக
இருக்குமானால்......
******************
என்னை விளங்கப்படுத்த
கரும்பலகை தேவையில்லை
ஒரு காரணம் போதும்.....
******************
நான் வற்றிப் போனபின் தான்
தெரிந்து கொண்டேன் என்னை
எத்தனைபேர் குடி நீராகா
பாவித்தார்கள் என்பதை......
******************
என்னிடம் இருப்பதே அதிகம்
என்பதை தெரிந்து கொண்டபின் தான்
இறைவனை நான் திட்டுவதில்லை........
******************
என் இறந்த காலம் என்ற கண்ணாடியே
நிகழ்காலத்தில் நான் தடுமாறாமல்
நடக்க உதவி செய்கிறது......
******************
இறைவனுக்கு தெரிந்த என் எதிர்காலம்
எனக்கு தெரிந்தால் சில வேளைகளில்
என் நிகழ்காலத்தையே நான் வெறுக்ககூடும்.....
******************
ஆசைபட்டால் கடன்பட்டாவது
அனுபவிப்பேன்.......
******************
பிரைச்சனைகள் என்னை
குளப்பும் போதுதான்
நான் குளம்பாமல்
இருப்பேன்......
******************
சின்ன வாய்ப்புகளையும்
தவறவிட மாட்டேன்
அனாலும்
பெரிய வாய்புகளுக்காய்
காத்திருக்கிறேன்......
******************
நான் தெய்வம் இருக்கு என்பதை
நம்புகிறேன்
அனால்
மததின் மூடனம்பிக்கையை
பின்பற்றுவதில்லை......
******************
என் விரல்கள் உள்ளவரை
மோதிரங்கள் தொலைந்ததற்காய்
கவலைப்படமாட்டேன்......
******************
உனக்கு நான் உதாரணமல்ல
உனக்கு நான் ஒரு தத்துவம்.........
******************
தினமும் தோற்றுப்போகிறேன்
பேசாமலிருக்க நினைத்து
பேசிக்கொண்டிருப்பதால்.......
******************
கடவுள் இருக்கிறார இல்லையா
என்று சந்தேகப்பட்டு வாழ்வதைவிட
கடவுள் இருக்கிறார் என்று
நம்பி வாழ்வதே மிகவும் சிறந்தது...
******************
என் வாழ்வில் நான் ஒரு போதும்
விழவே மாட்டேன் என்பதை நம்பவில்லை
எத்தனை தடவை விழுந்தாலும்
எழுவேன் என்பதைத்தான் நம்புகிறேன்.....
******************
வாழும்வரை நிழல் தருவேன்
இறந்தால்
என் காதல் துணைவியே
என்னை விறகாக்கி
உன் பசி தீர்ப்பேன்......
******************
மனிதனுக்கான மரியாதை
வாசல்வரை
பணத்திற்கான மரியாதை
மூலஸ்தானம்வரை.....
*****************************************************
**************************************
*******************************
**************************
******************
**************
******
**
*
-யாழ்_அகத்தியன்