தொட்டால் சிணுங்கி.....!
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/jw3mai.jpg)
உன்னைக் கண்டவன்
கண்களுக்கு கண்டதில்
எல்லாம் நீ.......
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/clip_image001.jpg)
நான் சுட்ட கவிதை
உன் பெயர்
யாரும் சுடாத
கிறுக்கல்
என் பெயர்........
************
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/nrews.jpg)
உன்னோடு புடவைக் கடைக்கு
வந்தால் நான் தலையாட்டும்
பொம்மையாகிவிடுகிறேன்
நீதான்
எந்த சேலையிலும்
அழகாய் இருக்கிறாயே.......
************
![](http://piriyan.files.wordpress.com/2010/03/004-veerasamar-amalapaul.jpg)
உன் கண்களைத் தானம்
கொடுக்க விரும்பினால்
ஊமைப் பெண்ணுக்கு கொடு
அவளும் வாயாடியாகட்டும்...........
************
உனக்கு எந்த சேலையும்
அழகுதான் அதைவிட அழகு
சேலை கட்டும் போது நீ.........
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|