இனியவளே....! {13}
![](http://1.bp.blogspot.com/_gH2fUV72V8M/SZay6-OtPdI/AAAAAAAACKg/-ZesSWCA-MM/s320/hugg.jpg)
இனியவளே…
உன்னை பார்க்க வேண்டாமென்று
சொல்லும் சமுதாயமே
என்னை பார்க்காததால் இன்னும் இன்னும்
உன்னை பார்க்க வைக்கிறது.......
*****
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/sarvvam-stills-002.jpg)
பெற்றோர்களை சுற்றி வந்தேன்
உலகறிந்த பிள்ளை என்றார்கள்
உன்னை சுற்றி வந்தேன்
ஊரைவிட்டே ஒதுக்கி
வைத்தர்கள்.....
******
![](http://sarumohamed.files.wordpress.com/2008/01/untitled.jpg)
உன்னை நான் கை விட்டாலும்
என்னை நீ கை விடாதே
நம்பிக்கை இல்லாமல்
என்னால வாழ முடியாது...
*******
![](https://img.webme.com/pic/y/yaalakathiyan/var5.jpg)
தனியா நடந்தால் பாதையெங்கும்
முள்ளாய் குத்துகிறது
உன் கூட நடந்தால்
பூக்களாய் வரவேற்கிறது....
*******
![](http://3.bp.blogspot.com/_zVBCDZG6zWU/TSFKDHhfB7I/AAAAAAAACQY/TyWMgkYI_X0/s1600/dreams-mirror.jpg)
என்னை கண்ணாடியில் பார்த்தால்
என் இறந்தகாலம் தெரிகிறது
உன்னை நேரில் பார்த்தால்
என் எதிர்காலம் தெரிகிறது.....
*****************************************
*******************************
*********************
***********
****
*
-யாழ்_அகத்தியன்
|