தரிசனமானவளே.....!
![](http://www.wallpaperpimper.com/wallpaper/Art_&_3D/Character/Praying-To-God-1-BOB9YPOV4B-800x600.jpg)
உன் அமைதியான
வேண்டுதலால் பொறுமையை
இழந்திருப்பாள் பூமாதேவி......
************
![](http://kayalmakizhnan.files.wordpress.com/2009/07/4.jpg)
நீ சுற்றி வந்ததால்
சனிஸ்வரனுக்கு பிடித்தது
தேவதை தோசம்.....
***********
நீ
முருகனைச்
சுற்றுகையில்
முருகன் மீது
சந்தேகப் படுகிறார்கள்
வள்ளியும் தெய்வானையும்......
************
![](http://wwwdelivery.superstock.com/WI/223/1657/PreviewComp/SuperStock_1657R-18408.jpg)
அழகானவள் கிடைக்க
வேண்டும் என்று வேண்டிக்
கொண்டிருந்தவர்கள்
எல்லாரும் உன்னைக் கண்டதும்
தேவதை கிடைக்க வேண்டும்
என்கிறார்கள்..........
************
![](http://1.bp.blogspot.com/_r3PjYt9mWEc/TSlyrDZRU6I/AAAAAAAAB0E/ET7OirIhhQE/s640/girl_praying.jpg)
கடைசியில் எனக்கும்
சந்தேகம் வந்துவிட்டது
பக்தர்கள்
உன்னைச் சுற்றுகிறார்களா..?
கோயிலைச் சுற்றுகிறார்களா..?
**********************************
************************
***************
*****
**
*
-யாழ்_அகத்தியன்
|