காகிதத்தாள்...... 
 
 
 
என் மகன் கையில் 
கிடைத்தால் 
அவன் கிறுக்குகிறான் 
அது அழகான 
சித்திரமாகிவிடுகிறது 
 
 
 
 
அத்தனையும் 
பொக்கிசமாக்கப்படுகிறுது 
என்னவளால் 
 
 
 
 
என் பங்கிற்கு 
நானும் கிறுக்குகிறேன் 
 
 
 
 
அது இதுவரை 
சித்திரமானதுமில்லை 
கவிதையானதுமில்லை 
 
 
 
 
கிறுக்கலாவதால் 
என் கையாலே 
கசக்கி எறியப்படுகிறது...... 
 
 
 
 
 
 
************************************************ 
************************************* 
**************************** 
******************* 
******* 
**** 
** 
* 
 
 
 
 
 
 
 
-யாழ்_அகத்தியன் 
 
  
																				 |